என்னுடன் வேலை செய்பவர் குடிபுக தொடர் மாடி குடிஇருப்புகளில் வீடு தேடுவதாக சொன்னார். அவருக்கு சொந்தமாக வீடு உள்ளதுஅதை என்ன செய்தீர்கள் என கேட்டபோது மிக இலகுவாக எனக்கும் எனது மனைவிக்கும் ஒத்து வரவில்லை அதனால் சிறிய இடைவெளி வேண்டி தான் மட்டும் வேறிடம் தேடுவதாக கூறினார். அவருக்கு இரு பெண் குழந்தைகள். என்ன சொல்வது என்று தெரியாமல் மெதுவாக "எனக்கு உனது உணர்வுகள் புரிகின்றன" என சொல்லி விட்டு எழுந்து வந்துவிட்டேன். அந்த இரு பெண் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ன நினைக்கையில் மனதை என்னவோ செய்தது. பல வேளைகளில் முரண்களுடன் வாழ்தல் கடினமானது எனினும் எம்மால் எம்மை சார்ந்தவர் வாழ்வுகளும் பாதிக்க படுகையில் கொஞ்சம் யோசிக்கலாம் என்கின்ற எண்ணம் எழுந்தாலும் யாருடைய தனிப்பட வாழ்வினுடுடான முடிவுகளும் மிகுந்த வலியின் பின்னராக எடுக்கபட்டிக்கும் என்றே தோன்றுகிறது.
எதையும் சரியாக புரிந்துகொள்கின்ற குழந்தைகள் எனின் இந்த மாற்றத்தை இலகுவாக ஏறறுகொள்வார்கள். பன்னிரண்டு வயது குழந்தைகளின் வாழ்விலிருந்து தந்தை பிரிந்து போதலும் வார இறுதியில் முகம் காட்டிபோவதும் எத்துணை வலியை தந்துபோதல் கூடும்.
மனதின் ஆழங்களில் பதிந்து போக முடியாத வார்த்தைகளின் விரியமும் இன்னமும் புரியாத வாழ்வின் ரகசியங்களும் காத்துபோகக்கூடும் எமக்கான உறவுகளின் நேசத்தை...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment