Sunday, August 8, 2010

ஒரு காதல் ஒப்பந்தம்


Minto centreல் mechanics lecture ஓடு போராடிக் கொண்டு இருக்கையில் cell phone vibrate பண்ணியது. உனது அழைப்பு, class முடிய இன்னமும் 30 நிமிடங்கள் இருக்கின்றன. Nithiya வை மெதுவாக திரும்பி பார்த்தேன் ,சிரிப்பது தெரிந்தது. cellல்லை திருப்பி call displayயை காட்டினேன் . தலையை மெதுவாக ஆட்டி விட்டு class கவனிக்க ஆரம்பித்தாள். 30 நிமிடங்கள் 25 நிமிடங்களாய் கரைந்திருந்தன. "Any Questions?" profன் கேள்வி class முடிய போவதை சொல்லாமல் சொல்லியது. நாளைய assigment கேள்விகளோடு Nithiya prof இடம் போக corridorல் wait பண்ணுவதாய் வழிந்து விட்டு வெளியே வந்தேன். ஓரமாய் நின்று உனக்கு call பண்ண இரண்டாவது ringல் உனது குரல் "hi குட்டி " என்றது. "என்ன middayல் call ஏதாவது important news ஆ?" " ம்ம்ம் .. guess பண்னேன்" " என்ன வேலையில் promotion /salary increment" "இல்லை guess it again" "என்னடா சொல்லேன் please" " I am on my way to ottawa" "hey two weeks இக்கு முதல் தானே வந்தாய் இப்ப என்ன மறுபடியும்" "எனக்கு உன்னை இப்ப பாக்கணும்" " hey அம்மாக்கு தெரிந்தால் அவ்வளவு தான்" " எங்களுக்கு Engagement நடந்திட்டுது தெரியும் தானே " " ஆனா Wedding இன்னமும் முடியல்லை " "என்ன uniல் வேற யாரையாவது side அடிகிறாயா" "ம் இன்னக்கு அவரோட தான் outing போறன்" "உதைபடுவாய்" "hey please next month toronto வரேக்கை பாக்கலாம்" "முடியாது இப்ப பாக்கணும் ..நானா wedding வேண்டாம் எண்டு சொன்னனான் நீ தான் படிப்பு முடியடும் அதுக்கு பிறகு என்றது இப்ப அம்மா பேசுவா அப்பா அடிப்பார் எண்டு சொன்ன நாங்க கேக்கனுமாக்கும்" "நாளைக்கு 3 assignments due ஒன்னு தான் முழுசா finish பண்ணி இருக்கி்றன் இப்ப நீ இங்க வந்த assignment முடிக்க ஏலாதுடா" "please just 2 hours spend பண்ணிட்டு போய்றன்" "சரி வா just 2 hours OK " parking lot இல் ஒரு 3 hours கழிச்சு wait பண்ணு" "OK bye" "bye" நித்தியா entrence இல் எனக்காய் wait பண்ணுவது தெரிந்தது. என்னவென்று அவளிடம் சொல்வது... அருகில் நெருங்கி "போகலாம்" என்றேன். எதுவும் கேட்க்காமல் வருபவளை பார்க்க பயமாக இருந்தது . " நித்தி Hari என்னை பாக்க வாறாராம் promise நான் வர சொல்லலை" என்றேன் .
"ம் நாங்க இந்த கதையை நம்பணுமாக்கும் " என்றாள். "hey please யா" என்றேன் . "போய் தொலை " என்றாள் சிரித்தபடி. "இப்படியே போனால் studies இல் concentrate பண்ண முடியாது just a friendly advice" என்றாள். " I know இனி இப்படி நடக்காமல் இருக்க try பண்ணுறன் இன்டைக்கு மட்டும் please.." என வழிந்தேன். "உனக்கு பசிக்குதா இல்லை பிறகு food court போவமா ?"என்ற நித்தியின் கேள்விக்கு "இல்லை இப்ப பசிக்கலை" என்றேன். "இனி Honeyயை காணும் வரை உனக்கு பசிக்காது" என்ற நித்தியின் கேலிக்கு " hey உனக்கும் ஒரு காலம் வரும் அப்ப madam நீங்கள் என்ன செய்ய போறிங்கள் என்று பாப்பம் " என சொல்லியவாறு computer lab நோக்கி நடந்தேன்.
Java assignment அரைவாசி முடித்து uni centre food court இல் சாப்பிடுகையில் மீண்டும் சிணுங்கியது cell. ஒரு கையால் cell silenceல் போட்டவாறு போகட்டுமா என்றேன் நான். "ம்ம் .. 9க்கு முதல் வந்திரூ இல்லாடில் அம்மா phone பண்ணினால் என்னால் பதில் சொல்ல முடியாது" என சிரித்தபடி நித்தி தலை அசைக்க‌ parking lot நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
இந்த இரண்டு மாதத்தில் Hariய் புரிந்து கொண்ட‌து என்ன‌வோ கொஞ்ச‌ம் தான் ஆறு மாதத்திற்கு முதல் "proposal ஒன்று வந்திருக்கு" என்று அம்மா ஆரம்பிக்கும் போதே "எனக்கு இப்ப பார்க்க வேண்டாம், வேணும் என்டால் அண்ணாவுக்கு பாருங்கோ, நான் படித்து முடித்த பிறகு தான் marry பண்ணுவதை பற்றி யோசிப்பன்" என நான் வியூகம் அமைக்க தொடங்கும் போதே அம்மா த‌னது போர் முறையை மாற்ற தொடங்கி விட்டார். "உன்னை யார் இப்ப‌ marry பண்ண சொன்ன‌து , இப்ப register பண்ணு படிப்பு முடிய விட்டு பிறகு பாப்பம் " " இப்ப என்ன அவசரம் எனக்கு வேண்டாம்" என்ன நான் கத்த தொடங்கும் முன் " மகள் உனக்கு பிடித்திருந்தால் தான் மேற்கொண்டு பேசுவம் முதலில் போட்டோ பார் " என அப்பாவும் அம்மாவுடன் சேர்ந்து ஆரம்பித்தார்.


முறைத்தபடி நான் நகர மாமாவுக்கு போன் பண்ணி "பின்னேரம் வீட்டை ஒருக்கா vanthidu போ " என தொடங்கிய அம்மாவின் பேச்சுகள் இரண்டு மாதத்திற்கு முதல் எங்கள் engagmentஇல் வந்து நின்றது தொடரும் தொடரும்


இந்த இரண்டு மாதத்தில் வீட்ற்க்கு தெரியாமல் இது நான்காவது சந்திப்பு. ஒவ்வொரு முறையும் Harri வரும் போதெல்லாம் கேட்க்க நினைத்த ஆயிரம் கேள்விகளும் அடுத்த முறை கேட்கலாம் என்றே தள்ளி போய் கொண்டிருக்கிறது.

இன்னமும் முடிக்க ப‌ட்டாத‌ Assignments இரண்டையும் முடித்துவிட்டு தூங்க போக எப்படியும் 4 மணி ஆகப் போகிறது. நாளைக்கு morning lab வேறு இருக்கிறது. இப்படி ஓன்றும் சொல்லாமல் Harri வருவது இலேசாக கோபத்தை வர வைத்தது. முன்னரே சொல்லி இருந்தால் Assignments முடித்து விட்டு காத்திருந்து இருக்கலாம். இந்த முறை எப்படியும் சொல்லி விட வேண்டும் இனி இப்படி சொல்லாமல் வர வேண்டாம் என்று.

Harriஇன் car parking lotஇன் இடது புறம் நிற்பது தெரிந்தது. ஒடி சென்று ஏறிக் கொள்ள "Hi Kutty" என்றது Harriஇன் குர‌ல். என்னையும் அறியாமல் புன்னகையோடு 'Hi" என்றேன்.


"இப்ப சொல்லு ஏன் இந்த திடிர் visit"


"Hey relax உன்னை ஒன்டும் கடித்து தின்ன மாட்டான் பயப்பிட வேண்டாம்"


" விளையாடதே 6 hours drive பண்ணி 2 hours spend பண்ண வந்தியா"


"ம்...I want to see you அது தான் வந்தனான்"


" பொய் வேற reason இருக்கு..please சொல்லு" ‌


"நீயே கண்டு பிடி இன்னமும் time இருக்கு அதுக்கு முதல் எனக்கு பசிக்குது சாப்பிட போவம்"


Restaurantஇல் order கொடுத்து விட்டு "என்ன கண்டு பிடிச்சாச்சா.." என்ற Harriக்கு "Time வரேக்க நீயே சொல்லு" என்றேன்.

தொடரும்....


Monday, March 23, 2009

உன்னைப் பிரியும் நொடியில்

நிலவு நிறைக்கிறது
தெருவை- மெல்ல
சிணுங்கும் Cell உம்
"செல்லமாய் செல்லம் என்றாயடி"
எனப் பாடிச் செல்கிறது

ஒவ்வொரு முறையும்
உந்தன் அழைப்பாய்
இருக்குமான - எடுக்கையில்
எவர் எவரோ

குரல் எல்லாம்-
எனைநலம் விசாரிக்கும்

கசந்த நெஞ்சின்
அடியிலிருந்து-மெல்லெனவொரு
அழுகுரல் கண்களின்
ஓரம்கண்ணீராய் தெறிக்கும்
நாம் தூர-இருக்கையில்
அருகில் இருந்தோம்
இப்போ-அருகிலிருந்தும்
அண்மையிழந்தோம்...

உந்தன் Soap இன் வாசமும்
தோளின் வளைவில்
சாய்ந்திருக்கையில் நாசி துளைத்த
உந்தன் சென்டின் வாசமும்
மெளனம் பழகியபடி
கைகள் கோர்த்து
வீதிகள் கால்களால்
அளந்த வேளையில்
உந்தன் கண்கள் பேசிய
கவிகளின் ஆழமும்
பாதி பாதியாய் பகிர்ந்து குடித்த-
கோப்பைத் தேநீரின் சுவையும்
இன்னமும் தித்தித்தபடி
எந்தன் நினைவுகளில்...

அன்னை கைவழியுந்தன்
புகைப்படம் என்னை அடைகையில்
என்னில் இல்லை எந்த மாற்றமும்
"உங்களுக்குப் பிடித்தால் சரி" எனும்
மூன்று வார்த்தைகளில்
என்னுலகம்- உன் உலகமானது..

எது உன்னில் என்னைக் கரைத்தது?
உந்தன் பேச்சா- இல்லை
உந்தன் புன்னகையா-இல்லை
என்னை நானாகவே ஏற்றுக் கொண்ட
உந்தன் இயல்பா
சொல்லத் தெரியவில்லை
இன்று வரை.....

தொலைபேசித் தொலைவுகள்
சுருங்கிப் போகுமொருநாளில்-Ottawa
வந்தாய் நீயும்
மறக்க முடியாதநாள்-
மறக்கமுடியாத நேரம்
செல்லமாய்ச் சிணுங்கிய
தொலைபேசியில்
உந்தன் குரல்
"ஒரு நிமிடம் Please
கீழே வர முடியுமா?" என்றது

எந்தன் கண்கள்-என்னையே
நம்ப மறுத்தன-கைகள்
நிறைந்த Red Roses
முகம் மறைக்க-எனைப்பார்த்து
தலைசாய்த்து-நீ
சிரித்துவந்த நொடியில்
என்னை இழந்தேன் நான்

மெல்லச் சிரித்தபடி
"உங்களைப் பார்க்க
வேண்டும் போலிருந்தது அதுதான்...."
என வார்த்தைகள் கிடைக்காமல்
நீயும்- வெட்கத்தை
எங்கே கரைப்பதெனத்
தெரியாமல் நானும்
நிமிடம் தொலைத்தோம்
வெறும் "Bye" யோடு
முடிந்ததெம் சந்திப்பு

இரண்டாவது மூன்றாவது-என
இது உனது ஐந்தாவது சந்திப்பு
உன்னை இன்று
பிரிகையில்-முன்னிலும்
அதிகமாய் வலித்தது மனது
கண்கள் கலங்கிக்
கரை உடைக்கையிலும்
கைகள் இறுக்கி
அழுகை அடக்கினேன்
ஏனெனில் எனக்குத் தெரியும்
எனது அழுகைக்காய்
காத்துக் கொண்டிருக்கிறது
உந்தன் விழிகளின் ஓரமாய்
வெடித்துச் சிதறதயாராய் கண்ணீரென....

எலும்புகள் உடையும் வண்ணம்-
இறுக்க அனைத்து-நெற்றிமுடி
கோதி- ஈரமுத்தம்
பதித்து-கோர்த்தகைகள்
பிரிக்க மனமற்று
பிரிந்து போகிறாய்- நீ
நிலவு நிறைக்கிறது தெருவை-
மெல்லமாய் "செல்லம் என்றாயடி" எனப்
பாடுகிறது cell உம்
ஆனால்-எதுவும் தடுக்கவில்லை
இங்கே வெடித்துச் சிதறும்-உனக்குக்
கேட்காத என் அழுகுரலை

Thursday, March 19, 2009

துணையுடனான வாழ்வு கேள்விகுறியாகையில்

என்னுடன் வேலை செய்பவர் குடிபுக தொடர் மாடி குடிஇருப்புகளில் வீடு தேடுவதாக சொன்னார். அவருக்கு சொந்தமாக வீடு உள்ளதுஅதை என்ன செய்தீர்கள் என கேட்டபோது மிக இலகுவாக எனக்கும் எனது மனைவிக்கும் ஒத்து வரவில்லை அதனால் சிறிய இடைவெளி வேண்டி தான் மட்டும் வேறிடம் தேடுவதாக கூறினார். அவருக்கு இரு பெண் குழந்தைகள். என்ன சொல்வது என்று தெரியாமல் மெதுவாக "எனக்கு உனது உணர்வுகள் புரிகின்றன" என சொல்லி விட்டு எழுந்து வந்துவிட்டேன். அந்த இரு பெண் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ன நினைக்கையில் மனதை என்னவோ செய்தது. பல வேளைகளில் முரண்களுடன் வாழ்தல் கடினமானது எனினும் எம்மால் எம்மை சார்ந்தவர் வாழ்வுகளும் பாதிக்க படுகையில் கொஞ்சம் யோசிக்கலாம் என்கின்ற எண்ணம் எழுந்தாலும் யாருடைய தனிப்பட வாழ்வினுடுடான முடிவுகளும் மிகுந்த வலியின் பின்னராக எடுக்கபட்டிக்கும் என்றே தோன்றுகிறது.
எதையும் சரியாக புரிந்துகொள்கின்ற குழந்தைகள் எனின் இந்த மாற்றத்தை இலகுவாக ஏறறுகொள்வார்கள். பன்னிரண்டு வயது குழந்தைகளின் வாழ்விலிருந்து தந்தை பிரிந்து போதலும் வார இறுதியில் முகம் காட்டிபோவதும் எத்துணை வலியை தந்துபோதல் கூடும்.
மனதின் ஆழங்களில் பதிந்து போக முடியாத வார்த்தைகளின் விரியமும் இன்னமும் புரியாத வாழ்வின் ரகசியங்களும் காத்துபோகக்கூடும் எமக்கான உறவுகளின் நேசத்தை...


Wednesday, March 18, 2009

அம்மா

இன்று வேலை அதிகம் இல்லை, சும்மா இருப்பது மன சன்யலத்தை இன்னமும் அதிகரிப்பதாக இருக்கிறது. அம்மாவின் துன்பம் பார்கமுடியாததாக உள்ளது. எல்லா வேளைகளிலும் கைகொடுபதில்லை கடவுள் நம்பிக்கை. என்ன வாழ்விது என்னும் கசப்பில் இன்னமும் எத்தனை நாட்க்களை தான் தொலைப்பது

வாழ்தல்

எழுதி முடிபடாத

கணங்களாய் கழிகிறது

வாழ்வு... இதில்

எதை எழுதி

கிழிப்பது

முதலாவது பதிவு

இது எனது முதலாவது பதிவு . நீண்ட நாட்கள் ஆக பதிவிட வேண்டும் என்ற எனது ஆசை இன்று நிறைவேறுகிறது.